விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ வெளியாகி இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளது. அதாவது, அஞ்சலி சரவணனை பார்த்து இந்தக் குழந்தையை காரணம் காட்டி மயிலோட சேர்ந்து வாழச் சொல்லுவாங்க என்கிறார்.

அதுக்கு சரவணன் குழந்தையை வேணும் என்றால் வாங்கி வளர்ப்பேனே தவிர, அவளோட சேர்ந்து எல்லாம் வாழமாட்டேன் என்று சொல்லுறார். மேலும், அஞ்சலியைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்கிறார்.
மறுபக்கம் கோமதி மயில் வீட்ட போய் குடும்பமே கொண்டாட வேண்டிய விஷயம் யாருக்கும் தெரியாமல் போச்சே என்கிறார். மேலும், கோமதி உன்னையும் குழந்தையையும் விட்டிட மாட்டோம் என்று மயிலுக்கு வாக்குறுதி கொடுக்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது....
Listen News!