விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது வெளியான ப்ரோமோ ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

அதில், சரவணன் பாண்டியன் கிட்ட போய் மயிலுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டேன் என்கிறார். அந்த நோட்டீஸைப் பார்த்த மயில் உண்மையாவே அனுப்பிட்டாரு என்று சொல்லி அழுகிறார். அதைக் கேட்ட பாக்கியம் என்ர பொண்ணு வாழ்க்கைக்கு இப்புடி நடந்திட்டு என்று சொல்லி பொலிஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புறார்.
பொலிஸ் ஸ்டேஷனில போய் பாக்கியம் வரதட்ஷனை வாங்கிட்டு வரச்சொல்லி என்ர பொண்ண டார்ச்சர் பண்ணுறாங்க என்று கம்பிளைன்ட் பண்ணுறார். மேலும் ஒருத்தர் விடாமல் எல்லாருடைய பெயரையும் கம்பிளைன்ட்டில எழுதுங்க என்கிறார்.

பின் பொலிஸ் பாண்டியன் குடும்பத்தில இருக்கிற எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள். இதுதான் இனி நிகழவிருப்பது....
Listen News!