• May 07 2024

சந்தியா எடுத்த முடிவால் ஷாக்கான சரவணன் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு ஏத்தாற் போல விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…..

சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போகிறது எனத் தெரிந்து வீட்டிற்கு வருகின்றனர் அவருடைய அண்ணனும் அண்ணியும். ‌ பின்னர் இந்த விழா ரத்தாகிவிட்டது என குடும்பத்தார் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான இவர்கள் சந்தியாவை பார்த்து இதற்கெல்லாம் காரணம் நீ தானே …இந்த நிகழ்ச்சியை ஏன் நிறுத்தினாய் என கேட்கின்றனர்.

இதன் பின்னர் சரவணன் மயிலு தன்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னதாக ஒரு ஏன் இப்படி பண்ணீங்க என கேள்வி கேட்கிறார். நடந்தது நடந்து விட்டது சரி கிளாஸ்க்கு கிளம்புங்க எனச்சொல்ல இனிமேலும் அத்தையை ஏமாற்ற முடியாது நீங்க கிளாசுக்கு போற விஷயத்தை சொல்லுங்க, ‌ அதுவரைக்கும் நான் கிளாசுக்கு போறதா இல்லை என சொல்ல சரவணன் அதிர்ச்சியாகிறார். இதன் பிறகு அப்பாவின் கனவு பற்றி சொல்லி சந்தியாவை கிளாசுக்கு போக சம்மதிக்க வைக்கிறார்.

மேலும் அதன் பின்னர் பார்வதி பாஸ்கரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கின்றனர். குடும்பத்தார் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பிறகு பாஸ்கரின் அம்மா சிவகாமியிடம் பேசும்போது ரெண்டு பேரும் மைசூருக்கு போறாங்க போயிட்டு சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் அப்பதானே நமக்கும் பேரனோ பேத்தியோ கிடைப்பாங்க எனக் கூறுகிறார்.

இதைக் கேட்ட சிவகாமி சந்தியா சரவணனையும் ஹனிமூன் அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். மேலும் இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement