• May 19 2024

நான் மட்டுமா மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்டேன்.? நடிகை நேஹா பெண்ட்சேயின் காட்டமான பேச்சு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நேஹா பெண்ட்சே. எனினும் அதனை தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருந்தாலும் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடிகை நேஹா பெண்ட்சே தொழிலதிபர் ஷர்துல் பயாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பி வருகின்றனர். தொழிலதிபர் ஷர்துல் பாயாஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தொழிலதிபர் ஷர்துல் பாயாஸுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்காமல் இருந்தார் நேகா. இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்தும் பலவித ட்ரோல்கள் இணையத்தில் குவியவும், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக பதில் அளித்துள்ளார். ‘ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏதோ உலகத்திலே நான் மட்டுமே மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை போல் பலர் பேசுகிறார்கள்

மேலும் இது அவரவர்களின் விருப்பம். தற்போதைய காலகட்டத்தில் இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது’ என்றும் தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் நான் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது நான் விரும்பி எடுத்த முடிவு. இதற்கு ஏன் இப்படி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதுகிறீர்கள் என காட்டமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் நேகா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement