• May 19 2024

நடிகை சாய் பல்லவிக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். அத்தோடு தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலன்களுக்காக, தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல விஷயங்கள் செய்வார்கள்.

மேலும் அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்.

இதை பார்த்த நடிகை சாய் பல்லவி, அதிர்ச்சியில் உறைந்துபோக, அதன்பின் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement