• Apr 28 2024

சந்தானம் பட ஷூட்டிங்கில் கேவலமாக தடவிய நபர்- நடிகை செய்த முரட்டு செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த். மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

பஞ்சாப் மாடல் அழகியான இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.இதன் மூலம் படவாய்ப்புக்களைப் பெற்று நடித்தும் வருகின்றார்.

இதனைதொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு படுகாயங்களுடன் படுத்த படுக்கையில் இருந்தார். தோழியை இழந்ததோடு 4 மாதங்களாக சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார்.

எனினும் அதனைதொடர்ந்து படங்களில் நடித்து கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவ்வாறுஇருக்கையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த்-திடம், யாராவது தவறாக நடந்து கொண்ட விசயம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து யாஷிகா, ஆம், சந்தானம் சார் படத்தின் ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நபர் என் பின்பக்கமாக தட்டினார்.

திரும்பி பார்த்து அந்த நபரை பிடித்து அந்த இடத்தில் அடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நீங்கள் விர்ஜினா? என்ற கேள்விக்கு இல்லை நான் ஏர்டெல் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement