• Sep 20 2024

மனைவியுடன் சமந்தாவின் மாஜி மாமனார் திருமண கொண்டாட்டம்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அமலாவும் நடிகர் நாகார்ஜூனாவும் 1980 மற்றும் 1990களில் பல படங்களில் இணைந்து நடித்து ஹிட் கொடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து நீண்ட ஆண்டு காதலுக்கு பின்னர், 1992ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இவர்களுக்கு 1994ஆம் ஆண்டு அகில் என்ற மகன் பிறந்தார். அதிலும் சினிமா நடிகராக உள்ளார். இவ்வாறுஇருக்கையில் நாகார்ஜூனா கடந்த 11 ஆம் தேதி தனது மனைவியுடன் 30வது திருமண நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது மனைவியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நாக சைதன்யா. மேலும் இன்று அமலா மீதும் என் மீதும் பொழிந்த அன்புக்கும் ஆசிகளுக்கும் அனைவருக்கும் நன்றி!! 30 வருட ஒற்றுமை… இன்னும் பல வருடங்கள் உங்கள் வாழ்த்துக்களுடன் வரட்டும் என தெரிவித்துள்ளார்.

நாகார்ஜூனா லக்ஷ்மி டக்குபதியை 1984ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு நாக சைதன்யா என்ற மகன் பிறந்தார். இதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார் நாகார்ஜூனா. இதேபோல் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement