• Sep 19 2024

'சச்சின்' பட நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்... தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன் சர்மா. அந்தவகையில் இவர் தமிழில் 'கண்ணெதிரே தோன்றினாள், ப்ரெண்ட்ஸ், அப்பு, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு மலையாளத்திலும், தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுமுள்ளார்.


இந்நிலையில் மோகன் சர்மா போயஸ் கார்டனில் தனக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்கும் நோக்கில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். பின்னர் இடைத்தரகர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு வீட்டை விற்பனை செய்தார். 


ஆனால் வீட்டை விற்பனை செய்த நாள் முதல் குறித்த இரண்டு இடைத்தரகர்களும் அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருவதாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே தகராறு நடந்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 26-ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடிகர் மோகன் சர்மா காரில் சென்ற போது அவர் மீது இடைத்தரகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 


இதனைத் தொடர்ந்து தற்போது தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் மோகன் சர்மா புகாரளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement