• May 03 2024

அபியைப் பிரிப்பதற்காக வெற்றியை உசுப்பேத்தும் கண்மணி... கோபத்தின் உச்சத்தில் வெற்றி... பரபரப்பான 'Thendral Vanthu Ennai Thodum' Promo..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் வெற்றியிடம் சுற்றி நிற்பவர்கள் "கடைசியில் கபிலன் சார் நம்ம மேல பழியைப் போட்டு நம்மளையே தூக்கி உள்ள வச்சிட்டார் பார்த்தீங்களா" எனக் கூறுகின்றனர். பதிலுக்கு கண்மணி "அவர் என்ன பண்ணுவாரு, அவருக்கு என்ன ஆடர் வருதோ அதைத்தான் அவர் செய்வாரு" என்கிறார். 


மேலும் "இதெல்லாம் அந்த அபியோட ஆர்டர் தான், நடக்கிறதெல்லாம் அபிக்கு தெரிஞ்சுதானே நடக்கு, ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் அபியும் சம்மந்தப்பட்டு இருக்கா தானே, கபிலன் வெற்றியை அரெஸ்ட் பண்ணியப்போ வேணாம் என்றா சொன்னாங்க இல்லைத்தானே" என்கிறார் கண்மணி.


அதற்கு உடனிருந்தவர்களும் "ஆமா, ஆரம்பத்தில் இருந்தே அபியும் தானே உடனிருக்கா,அபிக்கு உன் மேல கோபம் அதனால் தான் கபிலன் அரெஸ்ட் பண்ணினப்போ பேசாமல் வந்திருக்கா" என்கிறார்கள்.


இதனைக் கேட்டதும் கோபத்தில் பொங்கி எழுந்த வெற்றி "நிறுத்துங்க, நான் அபி கூட வாழ்ந்தவன், கஷ்டத்திலும் நஷ்டத்திலும் அவளைப் பிரியாமல் வாழ்ந்திருக்கேன், அவள் எவ்வளவு நேர்மையானவள் என்று எனக்குத் தெரியும்" என அபியை விட்டுக் கொடுக்காமல் பேசுகின்றார்.  


Advertisement

Advertisement

Advertisement