• May 09 2024

200 கோடி பண மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல நீதிமன்றம் அனுமதி...!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

ரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். மேலும், நடிகை ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதன் காரணமாக அவர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது..இந்நிலையில் விளம்பர நிகழ்வுகளுக்காக தற்போது அமேரிக்கா  செல்ல நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement