• Apr 27 2024

ராபர்ட், ரச்சிதா பேசிகிட்டது என்ன..? சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

பிக்பாஸ் வீட்டை விட்டு ஜி.பி.முத்து மற்றும் சாந்தி வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்களே உள்ளனர். அசிம் ஆயிஷா சண்டை, தனலட்சுமி ஜனனி சண்டை, ஜனனி ஆயிஷா சண்டை, விக்ரமன் அசீம் சண்டை என பல விதமான சண்டைகள் பலவிதமான டாஸ்குகள் விஸ்வரூபம் எடுத்தன. எனினும் இதன் தொடர்ச்சியாக தற்போது பொம்மை டாஸ்க் உருவெடுத்திருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த மணிகண்டன் ராஜேஷூம் ஒரு கணம் ஆவேசமானதை காண முடிந்தது.

மேலும்  இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும். 

இதில் ரச்சிதா, ராபர்ட் உள்ளிட்ட டீம் அசீமை பற்றி பேசிக்கொள்ளும் பேச்சு பரபரப்பாகியுள்ளது. அதாவது  அசீம்தான் தன்னுடைய பொம்மையை எடுத்து ஆயிஷாவிடம் கொடுத்ததாக ரச்சிதா கூறுகிறார். தொடர்ந்து ராபர்ட்டும் ரச்சிதாவும் அசீம் மைண்ட் கேம் ஆடுவதாக குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு கடந்த வாரங்களை பொறுத்தவரை அசீம் - ஆயிஷா சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிதாக வெடித்தது. ரேங்கிங் டாஸ்கில் நடந்த இந்த பிரச்சனையில், அசீம் மற்றும் ஆயிஷா பிறகு சமாதானம் ஆனாலும், வார இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் அசீம், தன் தவறுக்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்தார். இதனிடையே, “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்கிற இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தடுக்கும் பொருட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபடக்கூடிய காட்சிகளும் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement