• Apr 28 2024

ஹீரோவாக களமிறங்கும் ராஜமௌலி.. வெளியான சூப்பர் அப்டேட்...திடீரென ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். 

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது. 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.



 அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். 

இந்நிலையில் ராஜமௌலி நடிகராக களமிறங்கியிருக்கிறார். அதாவது பிரபல மொபைல் ஃபோன் நிறுவனமான 'OPPO' நிறுவனத்தின் விளம்பரத் தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'OPPO' மொபைல் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement