• May 20 2024

ராதிகாவின் வருங்கால கணவர் கோபி தான் என்பதை அறிந்த தனம் மற்றும் மூர்த்தி- பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாகவும் சூப்பர் ஹிட்டாகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களும் சேர்ந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபியின் அப்பா பிறந்தநாள் பார்ட்டிக்கு ராதிகா வருகிறார். அவர் உள்ளே வந்ததும் கோபி. அங்கிருந்து கிளம்பி தப்பித்து விடுகின்றார்.

அதன் பின் ராதிகாவுக்கு போன் செய்து தனியாக சந்திக்கின்றார். இதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்து விடுகிறார். இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய புரோமோவில் தனமும் மூர்த்தியும் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சென்று அவரின் வருங்கால கணவரின் போட்டோவைக் காட்ட சொல்லி கேட்கின்றனர்.

ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை காட்ட அதிர்ச்சியான மூர்த்தி வீட்டுக்கு வந்து கோபியைத் திட்டுவதைக் காணலாம்.

Advertisement

Advertisement