• Jun 23 2024

பா ரஞ்சித்துக்கு பயந்து பின்வாங்கினாரா அல்லு அர்ஜுன்? ஆகஸ்ட் 15ஐ லாக் செய்த ‘தங்கலான்’..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தன என்பது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை மட்டுமே இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு விற்பனை ஆனது என்றும் திரையரங்கில் கிடைக்கும் வசூல் அனைத்தும் தயாரிப்பாளருக்கு லாபம் என்றும் கூறப்பட்டது.

’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருப்பதை எடுத்து ’புஷ்பா 2’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் ’புஷ்பா 2’குழுவினர் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பா ரஞ்சித் படத்தை பார்த்து பயந்து பின்வாங்கியதா? அல்லது ’புஷ்பா 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாததால் பின்வாங்கியதா? என்று தெரியவில்லை என்றாலும் இப்போதைக்கு பின்வாங்கி இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தகவலில் உண்மையில்லை என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கூறிவரும் நிலையில் படக்குழுவினர் மீண்டும் ’புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement