குறுகிய காலத்தில் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படமானது வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இப்படத்தினை அனுதீப் குமார் இயக்கியுள்ளதோடு கதாநாயகியாக மரியா என்னும் நடிகை நடித்துள்ளார். இவருடன்பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “இந்த படத்தின் இயக்குநர் அனுதீப் தெலுங்குகாரர். அவர் தெலுங்கில் சிந்திப்பதை தமிழுக்கு ஏற்றபடி மாற்றவேண்டும். இதனால் இந்த படம் கொஞ்சம் சவாலானதாகதான் அமைந்தது.” எனக் கூறியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்பானது அதிகமாக காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!