• Apr 17 2025

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபிள் சப்ரைஸ்..திரையரங்கை கதறவைக்க ரெடியாகும் மக்கள்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் அஜித், தனது ரசிகர்களுக்கு இந்த வருடம் இரட்டிப்பான மகிழ்ச்சியை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு "விடாமுயற்சி" படம் வெளியான நிலையில், தற்பொழுது அவர் நடிப்பில் உருவான 'குட் பேட் அக்லி' திரைப்படம் நாளை ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.


அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு அதிரடியான கதைக் களத்துடன் உருவாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தில் அஜித் பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறப்பான ஸ்டைல், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஆழமான உணர்வு ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.


இந்த நிலையில், மே 1ம் திகதி அஜித் ரசிகர்களுக்காக மேலும் ஒரு சிறப்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்தின் மிகப் பிரபலமான திரைப்படங்களில் ஒன்றான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம், அஜித், ஐஸ்வர்யா ராய் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சாரமான வெற்றிப் படமாகும். இப்படம் தற்பொழுது  ரீ-ரிலீஸாவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மொத்தத்தில், இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமையும் எனத் தெரிகின்றது. அந்தவகையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய இரண்டு படங்களும் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Advertisement

Advertisement