தமிழ் சினிமாவில் நடிப்பிலும் சரி இயக்கத்திலும் சரி வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும் பிரபலம் தான் நடிகர் பார்த்தீபன். இவர் கலையின் மீது இருக்கும் தீராத தாகத்தினால் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் தற்பொழுது இரவின் நிழல் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
இப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பார்த்தீபன் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பார்த்தீபன், உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில், குறிப்பிட்டு ஒருவரை சொல்ல முடியாது நிறையபேர் இருக்காங்க ஆனால், சமீபத்தில் என் மனம் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ் என்றார்.விக்ரம் படம் பார்த்து வியந்து விட்டேன், கமல், விஜய்சேதுபதி, பகத் பாஃசில், சூர்யா என நான்கு ஜாம்பவான்களை வைத்து படம் எடுப்பது என்றாலே குழம்பிவிடும் ஆனால், அதை கச்சிதமாக செய்து இருக்கிறார் லோகேஷ். அதுவும் எப்படி அவரால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடிகிறது என்று தெரியவில்லை என்று லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- “நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம்- டுவிட்டரில் மோட்டிவேஷன் கருத்தை பதிவிட்ட செல்வராகவன்
- ஆன்மீகத்தில் ஆர்வம் இருக்கு மூட நம்பிக்கை மட்டும் கிடையாது- ரஜினியின் சுவாரஸியமான பேட்டி
- காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!