• May 19 2024

வாழ்க்கையில் யாரையும் நம்பி இருக்க கூடாது.. திடீரென செல்வராகவன் போட்ட ட்வீட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இயக்குநர் தான் செல்வராகவன். இன்று உலகப்புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் தனுஷை தமிழ் ரசிகர்களுக்குஅடையாளம் காட்டியவர் தான் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை துவங்கிய செல்வராகவன் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப்பார்க்க செய்தார். எனினும் அதன் பின் 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என செல்வராகனின் படைப்புகள் காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவையாக அமைந்தது.

மேலும் என்னதான் இவரின் சில படங்கள் வசூலில் முன்ன பின்ன இருந்தாலும் காலம் கடந்து ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கின்றது. இவ்வாறுஇருக்கையில்  தற்போது நடிகராகவும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் செல்வராகவன் சமீபத்தில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார்.

தனுஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்த செல்வராகவன் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை ஓரளவு பெற்றது. அத்தோடு பழைய செல்வராகவனின் படங்களை போல இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது செல்வராகவன் போட்டிருக்கும் ஒரு ட்வீட் சமூகத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது. அவர் குறிப்பிட்டவாறு, இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கிவிட மாட்டார்கள். நாம் தான் நிமிர்ந்து நிற்க வேண்டும்.யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடைக்க வேண்டியது தான் என அவர் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் யாரை குறிப்பிட்டு சொல்கின்றார் என பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த ட்வீட்...




Advertisement

Advertisement