சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு பிரபல நிகழ்ச்சியில், நடிகர் பப்லூ பிரித்விராஜ் கலந்துகொண்டு, தனது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சினிமா வாழ்க்கையை பகிர்ந்தார். ஆனால் நிகழ்ச்சியின் முக்கியமான ஹைலைட், திரையில் நடிகை சிம்ரன் கதைத்த வீடியோ தான்.
"ஐயோ... சிம்ரனா?" என வியப்புடன் தொடங்கிய பப்லூவின் முகபாவனை, ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியது. அதன்போது சிம்ரன், “ஹாய் பப்லூ... ரொம்ப நாள் ஆச்சு இப்படி பேசி. But I keep following you. You’ve always been very lucky for me… You are a phenomenal actor and a sweetheart! good luck to you.” என்றார்.
அதைப் பார்த்த பிரித்விராஜ், " சிம்ரன் ரொம்ப நல்ல friend. அவங்க hard work பண்ணி நடிப்பாங்க என்றதுடன் இப்ப சிம்ரன் ஒரு படத்தை produce பண்ணுறாங்க." எனவும் தெரிவித்திருந்தார். அதே நேர்காணலில் ராகவாவின் வீடியோவையும் நடுவர்கள் பகிர்ந்திருந்தனர்.
அதன்போது ராகவா, " உங்களில பலருக்கு தெரியுமோ என்று எனக்குத் தெரியல பிரித்விராஜ் எப்பவுமே drinks and smoke பண்ணமாட்டார். ஒருநாள் ரோட்டில வரும் போது பொலீஸ் பிரித்விராஜை மறித்தார்கள். அப்ப sudden- ஆ பிரித்விராஜ் குடிச்சது மாதிரி பொலீஸுக்கு நடித்தார். எனக்கு இவன் என்ன செய்யுறான் என்றே தெரியல. பிறகுதான் எனக்கு புரிஞ்சது பிரித்விராஜ் பொலீஸாருடன் ஜோக் பண்ணிட்டு இருந்தான்." எனவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த பிரித்விராஜ் ரொம்பவே சந்தோசமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
Listen News!