• May 19 2024

திருமணம் குறித்து உண்மையை உடைத்த நித்யா மேனன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை நித்யா மேனன்.இவர் தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி துணை நடிகையாக நடித்து வந்தவர்.

இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும், தமிழில் 180 படத்திலும் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த வகையில் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகின்றார்.ஹைதராபாத் மார்டன் லவ் என்ற அந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து நித்யா மேனனுக்கும், பிரபல மலையாள ஹீரோ ஒருவருக்கும் விரைவில் திருமணம், அதனால் தான் அவர் புதுப்படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது.

அய்யய்யோ, திருமணத்திற்கு பிறகு நித்யா மேனன் நடிக்க மாட்டாரா என்று சிலர் கவலையுடன் கேட்டார்கள்.ஆனால் நித்யா மேனன் நடிக்க வருவதற்கு முன்பே டீனேஜில் இருந்து அந்த ஹீரோவுடன் பழகி வருகிறார். முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாகிவிட்டார்கள் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து மலையாள ஊடகத்திற்கு நித்யா மேனன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது

சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் வதந்தியில் துளி கூட உண்மை இல்லை. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன்பு உண்மையை அறிந்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement