• May 20 2024

எதை வாங்கக் கூடாதோ அந்தப் பெயரையே வாங்கிய ஜனனி- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில்  20 போட்டியாளர்களுடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்களே ஆன நிலையில் கடந்த சீசன்களை விடவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. இதனால் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜனனி, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முதல் நாளே தனது வெள்ளந்தியான பேச்சால் பலரையும் கவர்ந்து விட்டார்.


இதனால் முதல் நாளே அவருக்கு ஆர்மி தொடங்கி விட்டார்கள் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டிலும் சக போட்டியாளர்கள் மத்தியில் நிதானமாக நடந்து கொள்கிறார் ஜனனி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி தீர்த்தனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி சரியான விஷ பாட்டீல் என விளாசி வருகின்றனர்.


ஜனனி தனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் நழுவி விடுகிறார் என்றும் மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைத்து தன்னை மெச்சூர்டாக காட்டிக் கொள்கிறார் என்றும் சாடி வருகின்றனர். அதேநேரத்தில் ஜனனி பேசுவது சரிதான் என அவருக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் தான் இவரது சுயரூபம் வெளியில் தெரிய வரும் என்றும் பலர் கூறி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement