• May 05 2024

திருப்பதி கோயிலில் நயன்தாரா செய்த செயல்-சர்சையில் சிக்கியது எப்படி..? விசாரணையில் ஈடுபடவுள்ள நிர்வாகம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது சமூகவலைத்தளம் முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான்.

இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையில் இருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார். எனினும் குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பணிபுரிந்தவர் தான் நயன்தாராவுக்கும் மேக்கப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்பதற்கு அழழைப்பு விடுக்கப்படவில்லை.. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


சுவாமி தரிசனத்திற்கு பின்புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனை அறிந்த சில ரசிகர்கள் இப்படியுமா செய்வது என திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement