• May 04 2024

40வயதை எட்டப்போகும் நயன்-குழந்தை பெறுவதற்காக எடுத்த அதிரடி முடிவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவுக்கு, குழந்தை பெறுவதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஏழு வருட காதலுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் தான்  பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.கடும் கட்டுப்பாடுகளுடன்  நடந்த திருமண விழாவில் பல  முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

திருமணம் முடிந்தபிறகு நயன் - விக்கி இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர்.அத்தோடு  நயன்தாரா ஷாருக்கின் ஜவான் படத்தில் நடிக்க இருந்ததால் இருவரும் வேகமாக இந்தியா திரும்பி விட்டனர் என்று கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நயன்தாரா. அவரது கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்து விட்டு திரையுலகை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

அடுத்த மாதம் இவர்கள் இருவரும் மீண்டும் நாடு திரும்பி, குழந்தை பெறுவதற்கான வேலைப்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


நயனுக்கு தற்போது 40 வயதாகிறதால் குழந்தைக்காக தொடர்ந்து சிகிச்சை எடுக்கப்போகிறாராம். இதனால் புதிய படவாய்ப்புக்களை தவிர்த்தும் வருகிறாராம்.

மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement

Advertisement

Advertisement