கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படமானது கடந்த 30ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.
விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ரவி என அனைவரின் நடிப்பையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.திரையரங்கிற்கு பல வருடங்களாக வாராத நபர்களையும் பொன்னியின் செல்வன் வரவைத்துள்ளது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயாராகி உள்ள இப்படமானது 5 நாட்களில் 270 கோடி வசூல் செய்து விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன்.
இதன்முலம் தமிழக பாக்ஸ் ஆபிசில் பொன்னியின் செல்வன் வெற்றி கொடியை பறக்கவிட்டுள்ளார்.இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ஐந்தாவது படம் பொன்னியின் செல்வன் ஆகும். இதற்கு முன்னர் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் மற்றும் யஷ்ஷின் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!