• Apr 26 2024

வெறும் நினைவுகளுடன் மாத்திரம் இறந்து போக வேண்டும்- திடீரென மகாலக்ஷ்மி போட்ட கேப்ஷனால் குழம்பிய நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தான் மகாலக்ஷ்மி. இவர் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகின்றார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திருப்பதியில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.


ரவீந்தர் பணக்காரர் என்பதால்தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தானே மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் மகாலக்ஷ்மி கூறினார் 


திருமணத்திற்கு பிறகும் சீரியல் விளம்பரம் ஆகியவற்றில் நடித்து சம்பாதித்து வருகிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்னாக்ஸ், சேலை, அழகு சாதனப் பொருட்கள் என அனைத்தையும் விளம்பரம் செய்து கல்லாக்கட்டி வருகிறார்.


அந்த வகையில் புதிய சேலை மற்றும் பிளவுஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் . அந்த போட்டோக்களுக்கு நினைவுகளுடன் இறக்க வேண்டும்... கனவுகளோடு அல்ல என கேப்ஷன் கொடுத்துள்ளார். மகாலட்சுமியின் இந்த புதிய லுக்ஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement