• May 18 2024

தூக்கி எறிஞ்சது மைக்கா, ஆனா ஒடஞ்சது என் மனசு – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பார்த்திபன்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை தன் வசம் கொண்ட பிரபலம் தான் பார்த்திபன்.இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படுகின்றது.

இவ்வாறு இருக்கையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. எனினும் தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த மார்ச் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது..

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. முதல் பாடல் வெளியீட்டின் போது ஏ ஆர் ரகுமான், பார்த்திபன் இருவரும் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. உடனே பார்த்திபன் கோபப்பட்டு மேடை மேல் இருந்து மைக்கை தூக்கி கீழே எறிந்தார்.

பின்னர் விழாவில் பேசும்போது பார்த்திபன் கூறியிருப்பது. பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன்.ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் ஒரு சில்டு கொடுத்தார். அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது. என்னால் வெளியில் கத்த முடியவில்லை. அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை.

அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பார்த்திபன், ரோபோ ஷங்கர் மீது தான் மைக்கை தூக்கி எறிந்தார். இதனால் பார்த்திபன் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், ரோபோ ஷங்கரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.அந்த வீடியோவும் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement