• May 18 2024

சூர்யாவின் இந்த படம் உலகம் முழுவதும் பேசும் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவரைாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.

நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தற்போது இவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டதோடு டெஸ்ட் ஷூட் மட்டும் நடைபெற்றது.

இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது வாடிவாசல் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படம் கே ஜி எஃப், RRR படங்களை அடுத்து உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் படமாக வாடிவாசல் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement