• Apr 15 2026

மணிமேகலை - ப்ரியங்கா பேசி தீர்த்து இருக்கலாம்! இதுதான் கஷ்ட்டமா இருக்கு...

shali / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலத்துக்கு முன்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை - ப்ரியங்கா இடையே ஏற்றப்பட்ட பிரச்சினை காரணமாக மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி விட்டு வெளியேறி இருந்தார். இதற்கு காரணம் இன்னுமொரு தொகுப்பாளினி தான் என்னை வேலை செய்ய விடுவதே இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.


இதனால் மணி ரசிகர்கள் அவருக்கு சப்போட்டாகவும் ப்ரியங்காவிற்கு எதிராகவும் பேச தொடங்கினர். இது குறித்து பலவாறான கருத்துக்கள் உலவிய நிலையில் இது தொடர்பாக vj ப்ரியங்கா எதுவுமே கூறவில்லை. இந்நிலையில் சற்று அந்த விடையம் மக்கள் மறந்து அடுத்த செய்தியை தேடி போன நிலையில் குக் வித் கோமாளி இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மணி- ப்ரியங்கா பிரச்சினை குறித்து பேசியிருந்தார்.


அவர் கூறுகையில் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் ஹேட்டாச்சீ என்ன என்றால் 2 பேருக்கு இடையில் உள்ள ஒரு பிரச்சினை அத அவங்களே பேசி தீர்த்து இருக்கலாம் ஆனா அத செய்யவில்லை. அது மக்கள் கிட்ட வரைக்கும் போயிட்டு ஒரு பிரச்சினை பல பிரச்சினையா மாறிவிட்டது. 


பிரியங்கா பத்தி எனக்கு நல்லா தெரியும் அவ எப்படி இருந்த இப்படி எப்படி வளர்ந்து இருக்குறானு அவ ஒரு நல்ல தொகுப்பாளினி எப்படி பட்ட ஷோவையும் நிண்டு செய்வார். அதேபோல மணிமேகலையும் அப்டித்தான் ஒருத்தவனாகி தள்ளி விட்டா கூட காமடி போட்டு தான் ரிப்ளை பண்ணுவா. நல்ல திறமையான பொண்ணு. இப்டி இருக்கும் போது 3வது நபர் அந்த விடையத்தில் வந்தது. நல்ல பெயர் மாறி திரும்பியது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.    


Advertisement

Advertisement