• May 09 2024

தனது செல்லப்பிராணியான பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மஞ்சிமா மோகன்-வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் மஞ்சிமா மோகன் . இதனைத் தொடர்ந்து கௌரவ் நாராயணனின் பெயரிடப்படாதப் படம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக உடல்எடை அதிகரித்ததால் திரைப்பட வாய்ப்பின்றி இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டீவாக இருந்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது தனது செல்லப்பிராணியான லோகி என்று அழைக்கப்படும் பூனைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கின்றார்.

இது குறித்து அவர் போட்ட பதிவில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சன்ஷைன் ஐ லவ் யூ தி மோஸ்ட்" குறிப்பிட்டுள்ளார். இது தவிர தனது செல்ல பூனை லோகியை பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார் .

அதில் சிறுவயதில் செல்லப்பிராணிகளை வளர்க்க என் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றும் ஆனால் அவர் எப்போதும் விலங்குகளை நேசிக்கிறேன் என்றும் , பின்னர் பூனை பிரியரான எஃப்.ஐ.ஆர் இயக்குநர் மனு ஆனந்தை சந்தித்தவுடன், நான் பூனைகளை விரும்ப ஆரம்பித்து பூனை பிரியர் ஆகி விட்டேன்என்றும் கூறினார் .

அவரிடம் 10 க்கும் மேற்பட்ட பூனைகள் உள்ளன அதில் நான் ஒரு பூனையை வைத்திருந்தால் என் வாழ்க்கை மாறும் என்று அவர் என்னிடம் கூறினார். லோகியை சந்திக்கும் வரை நான் பூனையை விரும்பவில்லை.. அவர் என் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார் அவரின் செல்லப்பூனை பற்றிய சுவாரிஸ்யமாக தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement