• Jan 16 2026

சோபியாவை பிரிய காரணம் 2வது மனைவி இல்ல.. இதுதான்..! மணிகண்டன் ஓபன்டாக்.!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகர் மணிகண்டன் ராஜேஷ். முன்னதாக பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் புகழ் மிகவும் உயர்ந்தது. இவர் சமீபத்தில் இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார் என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் செய்தி.


அதற்கும் முன்னதாக, அவர் தனது முதல் மனைவி சோபியாவை விவாகரத்து செய்தார் என்பது சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த இரண்டாவது திருமணம் தொடர்பாக, இணையத்தில் பலரும் விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை வெளியிட்ட நிலையில், மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தனது உண்மையான மனசாட்சி பேச்சை பகிர்ந்துள்ளார்.

நிகழ்ச்சியில் தனது இரண்டாவது திருமணத்திற்கும், முதலாவது மனைவியுடனான பிரிவிற்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என மனதளவில் தெளிவாக கூறியுள்ளார் மணிகண்டன்.


அதன்போது, "நான் ரெண்டாவது திருமணம் செய்யுறதுக்காகத் தான் சோபியாவை விட்டது என்று இல்ல. அந்தப் பொண்ணுக்கும் சோபியாவுக்கும் சம்மந்தமே இல்ல. கோவிட் டைம்ல இருந்து எனக்கும் சோபியாக்கும் பிரச்சனை வந்தது. குழந்தைக்காக தான் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்.

 ஒரு கட்டத்தில ஒரே வீட்டில இருந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறதை விட பிரிந்திடலாம் என்று முடிவெடுத்தோம். இந்த பிரிவுக்கும் இரண்டாவது மனைவிக்கும் சம்மந்தமே இல்ல." என்று கூறியுள்ளார். 


இந்த வார்த்தைகள், மணிகண்டன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு எப்படி வந்து விட்டார் என்பதை வெளிக்காட்டி உள்ளது. 

Advertisement

Advertisement