• Jun 24 2024

நான் செத்துருவேன்னு என்கிட்டயே பலர் சொன்னாங்க.. ‘மகாராஜா’ நாயகி அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ‘மகாராஜா’ நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் கேன்சரிலிருந்து குணமானது குறித்தும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட போது இருந்த மனநிலை குறித்தும் கூறியுள்ளார். 

தனக்கு கேன்சர் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்ததும் பலர் என் கண் முன்னே நீ சீக்கிரம் செத்துருவாய் என்று சொன்னார்கள் என்றும், ஆனால் நான் நம்பிக்கையுடன் அந்த நோயை எதிர்த்தேன் என்றும், கேன்சர் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்கும்போதே நான் இன்னொரு பக்கம் அதை பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொண்டிருந்தேன் என்றும், அதன் பிறகு தான் முழுமையான சிகிச்சை எடுத்து தற்போது குணமாகி உள்ளேன் என்றும் தெரிவித்தார். 

‘மகாராஜா’ திரைப்படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் தனக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’சிவப்பதிகாரம்’ ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ மாதவன் நடித்த ’குரு என் ஆளு’ அருண் விஜய் நடித்த ’தடையற தாக்க’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ‘மகாராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement