• Aug 09 2025

மகேஷ் பாபு birthday Special...! ராஜமௌலி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

பான் இந்தியா இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை மையமாகக் கொண்டு உருவாகும் 29வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பாக வெளியான தகவல்களின்படி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த பிரமாண்ட முயற்சிக்காக ரூ.50 கோடி மதிப்பீட்டில் காசி நகரத்தை ஒத்திருக்கும் ஒரு செட் ஐதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. VFX மற்றும் CGI தொழில்நுட்பங்கள் வெகுவாக மேம்பட்டுள்ள இந்நாளில் கூட, நம்பகமான மற்றும் விசுவாசமான காட்சிகளை அளிக்க, ராஜமௌலி பழைய பாணியில் செட் அமைக்கும் முறையைக் கடைபிடித்து வருகிறார். இது, படக்குழுவினரால் அடிக்கடி தளங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவையை தவிர்க்கவும், படப்பிடிப்பை வசதியாக நடத்தவும் உதவுகிறது.


இன்று, ஆகஸ்ட் 9ஆம் தேதி மகேஷ் பாபு தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, இப்படத்தின் First Look  நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மகேஷ் பாபு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் இந்த மெகா  project  இந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement