• May 04 2024

சிம்புவைக் காதலிப்பது உண்மை தான் அம்மாவுக்கு 1 கோடி ஜெயிச்சுக் கொடுக்கணும்- நடிகை ஸ்ரீநிதியின் பரபரப்பான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ஸ்ரீ நிதி. இவர் இந்த சீரியலலைத் தொடர்ந்து இன்னும் சில சீரியல்களில் நடித்தவர்.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களால் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றார்.அதாவது வலிமை திரைப்படத்தை விமர்சித்ததால் ரசிகர்களிடம் செமையாகத் திட்டு வாங்கியதோடு மன உழைச்சலுக்கும் உள்ளார்.

இது தவிர சிம்புவைக் காதலிப்பதாகவும் சீரியல் நடிகை நட்சத்திரா தவறான ஒருவரைக் காதலிப்பதாகவும் பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்குபற்றினார். அந்த பேட்டியில் நடிகை ஷகீலா இவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

அதில் முதலில் ஷகிலா பேசும் பொழுது, “சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி கேட்டார். அப்போது பதில் கூறிய ஸ்ரீ நிதி சிம்பு தன்னை காதலிப்பதாக சொன்ன கூற்று உண்மைதான் என்று முதலில் ஒப்புக் கொள்கிறார்.

மேலும் பேசியவர், “ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அப்போது சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே நினைத்துக் கொண்டேன். கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய இமேஜினேஷன் தான்.” என்று கூறினார்.மேலும் பேசியவர், “ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் எதையெதையோ பற்றி ட்விட்டரில் பேசுகிறார். என்னை பற்றி யோசிக்காமல் இருக்கிறார் என்று யோசித்தேன். தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் நடிகை ஷகிலாவிடம் தன் தாயார் பற்றி பேசிய ஸ்ரீநிதி, “என் அம்மா என்ன புரிஞ்சுப்பாங்க. அவங்க தேங்காய் பிஸினஸ் பண்றாங்க.. எனக்கு ஜீ தமிழ் சர்வைவர் ஷோவில் கலந்துகிட்டு 1 கோடி ரூபாய் ஜெயிச்சு அவங்களுக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கணும். என்னை பரிந்துரைக்கிறீங்களா? ப்ளீஸ்” என்று கேட்டதும், ஷகிலாவும், “சரி.” என்று சொல்லி அவரை தேற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்க்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement