• May 04 2024

'அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்க'-சிம்பு வீட்டின் முன் போராட்டத்தில் இறங்கிய பிரபல சீரியல் நடிகை-

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை விமர்சித்துப் பேசியதால் கடும் சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

அத்தோடு இவரை ரசிகர்கள் திட்டித் தீர்த்ததோடு சிலர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக ஸ்ரீநிதி கூறி இருந்தார்.அஜித் ரசிகர்களிடம் சிக்கி படாத பாடு பட்ட ஸ்ரீநிதி, தற்போது அடுத்ததாக சிம்புவை டார்கெட் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முதல் சிம்பு குறித்த மீம்ஸ் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அதில் ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் சிங்சிம்புகிளா இருப்போம் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்களாமே என ஐடியா கொடுக்க, இதுவும் நல்லா தான் இருக்கு என பதிலளித்திருந்தார் ஸ்ரீநிதி.

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் ஸ்ரீநிதி கூறி இருப்பதாவது : எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு. சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்கு எல்லாம் போராட்டம் இல்லையா? என அதில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்திறதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பார்க்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement