• Apr 02 2025

ராஜியின் நகையை கேட்டு கதிரை அடித்து உதைத்த குமரவேல்! பாண்டியன் செய்த காரியம்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் 2. இந்த சீரியலில் அடுத்து  என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,  குமரவேல் தனது  அடியாட்களுடன் கதிரை பிடித்து வைத்து  சரமாரியாக அடிக்கிறார். மேலும் ராஜி கொண்டு வந்த நகையும் பணமும் எங்கே என கேட்டுக்கேட்டு அடித்து துவைக்கிறார்.


இதை அடுத்து கதிரை காயங்களுடன் வீட்டிற்கு கூட்டி வர, கோமதி பார்த்து பதற்றத்துடன் பாண்டியனிடம் சொல்ல, வேற வேலை இல்லையா? என்று ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து நகர்கிறார்.

அதை அடுத்து ராஜியும் ரொம்ப வலிக்குதா?  என கேட்க, இல்ல சுகமா இருக்கு என கோவப்பட்ட கதிர்,  நானும் நினைச்சேன் அண்ணன் தங்கச்சி மேல இருக்கிற பாசத்துல தான் என்னை அடிக்கிறான் என்று ஆனா அவன் நகையைக் கேட்டு தான் அடிச்சான். எல்லாம் உன்னால தான் என்று சொல்லி கிளம்புகிறார் கதிர்.

Advertisement

Advertisement