• Apr 15 2026

பாட்டியின் கனவால் மனமுடைந்த குமாரவேல்.. பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு.! டுடே ரிவ்யூ

shali / 6 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வெளியில இருந்த பாட்டி கிட்ட போய் குமாரவேல் ஏன் அப்பத்தா இன்னும் தூங்கலையா என்று கேட்கிறார். அதுக்கு பாட்டி எனக்கு கனவில தாத்தா வந்து நீ எப்ப வரப்போற என்று கேட்டவர் எனக்கு போறதுக்கான நேரம் வந்திட்டு என்கிறார். அதைக் கேட்ட குமாரவேல் அப்புடி எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தாத சும்மா இரு என்கிறார்.


பின் பாட்டி மனசு முழுக்க வேதனையை வைச்சுக் கொண்டிருக்கிறதுக்கு பேசாமல் போயிடலாம் என்று சொல்லி அழுகிறார். அதனை அடுத்து குமார் அப்பத்தா உன்னோட பிறந்தநாளை எப்புடி எல்லாம் கொண்டாடணும் என்று நினைச்சிருக்கோம் நீ ஏன் இப்புடி கதைக்கிற என்கிறார். அதைக் கேட்ட அப்பத்தா என்ர பிறந்தநாளுக்கு ஊரே வந்தாலும் என்ர மகள் வரமாட்டால் தானே.... என்று சொன்னதைக் கேட்ட உடனே குமார் அமைதியாகிறார்.

மறுநாள் காலையில மீனாவும் செந்திலும் தனியா போய் இருக்கிறதுக்கு கிளம்புறார்கள். அப்ப செந்தில் மீனா கிட்ட வாற ஆட்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கு என்கிட்ட பணம் இல்ல உன்கிட்ட இருந்தால் கொடு என்கிறார். அதுக்கு மீனா நான் பணம் தரமாட்டேன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்க என்று சொல்லுறார். பின் பாண்டியன் செந்திலோட புது வீட்டுக்கு தான் வரல என்கிறார்.


அதைக் கேட்ட எல்லாரும் கவலைப்படுறார்கள். பின் மீனா கோமதிக்கு செயின் ஒன்றை பரிசா கொடுக்கிறார். மேலும் கோமதியை பார்த்து உங்க பையனால எல்லாம் தனியா ரொம்ப காலம் வாழ முடியாது கூடிய சீக்கிரமே திரும்ப வந்திடுவோம் என்கிறார் மீனா. அதனை அடுத்து எல்லாரும் செந்திலோட புது வீட்டை சுத்திப் பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement