• Sep 21 2024

'KPY சம்பியன்ஸ் சீசன் 3 இன் கிராண்ட் ஃபினாலேவில் சிறப்பு விருந்தினராக வரும் சிவகார்த்திகேயன்- லெஜண்ட் அண்ணாச்சி போல கலாய்த்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரசிகர்கள் ஏராளமானோர் காணப்பமுகின்றனர்.அவர்களில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் ஷெஃரிப், சாண்டி மாஸ்டர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரை உதாரணமாகக் கூறலாம்.

இவர்களில் காமெடியனாக அறிமுகமாகி, இன்று டாப் ஹீரோவாக அசத்தி வருகின்றார் சிவகார்த்திகேயன். இவரைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்றினாலே பிரபலம் ஆகி விடலாம் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தான் சூப்பர் சிங்கர், KPY, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 'KPY சம்பியன் சீசன்ஸ் 3' நிகழ்ச்சியானது வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, அர்ச்சனா, ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் வரும் 14ம் தேதி ஒளிபரப்பாகும் இறுதிப்போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு நடுவராக பங்கேற்றுள்ளார்.

இதனையடுத்து 'KPY சம்பியன்ஸ் சீசன் 3' இறுதிப்போட்டிக்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 'ஜலபுல ஜங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்டபடி என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன், தனக்கு அடையாளம் கொடுத்தது இந்த மேடை தான் என உருக்கமாக பேசுகிறார்.

இதில் அல்டிமேட்டாக லெஜண்ட் அண்ணாச்சி போல அரங்கத்திற்குள் வரும் அமுதவாணன், "நான் யாருக்கும் போட்டியில்ல, நீங்க பயப்படாதீங்க சிவகார்த்திகேயன்" என சொல்ல, அரங்கமே அதிர்கிறது. அதேபோல் இன்னும் சில சுவாரஸ்யங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.'KPY சம்பியன் சீசன் 3' இறுதிப்போட்டியில் சிவகார்த்திகேயன் சிறப்பு நடுவராக பங்கேற்றுள்ளதால், நிகழ்ச்சி செம்மையாக களைகட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement