• Apr 28 2024

கொளுத்துடா பட்டாச.... வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு 2.. மீண்டும் ரிபீட்டா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதையடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கியதோடு பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார். 

சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இப்போது ஹீரோ, வில்லன் என வித்தியாசமாக கலந்துகட்டி நடித்து கலக்கி வருகிறார் எஸ்.ஜே சூர்யா.


நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.இந்த படம் வெற்றியையும் வசூலையும் பெற்றுக் கொடுத்து இருந்தது.


இந்த நிலையில், தற்போது மாநாடு 2 படம் உருவாக உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு 2 உருவாக உள்ளதோடு, அதில் மீண்டும் சிம்பு, எஸ்ஜே சூர்யா இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement