• Apr 28 2024

கேஜிஎப் நடிகர் யாஷிற்கு கிடைத்த புதிய வெற்றி- அடடே இதை அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர் தான் யாஷ். இவரை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் கேஜிஎப். தாயின் ஆசையை நிறைவேற்றும் தகனின் வரலாற்றை எடுத்துக் கூறும் படமாக இப்படம் வெளியாகியிருந்தது.

இதனை கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்ததோடு இப்படம் 2 பாகங்களாக வெளியானது. இதன் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்துள்ளது. அத்தோடு இதனால் யாஷ் பான் இந்தய நடிகராக வலம் வருகின்றார்.


இந்த நிலையில் அண்மையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் யாஷ் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.அந்தப் புகைப்படத்தை இரண்டு மணி நேரங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.


எந்த வொரு நடிகருக்கும் இப்படி ஒரு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதோடு கேஜிஎப் 3 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement