• May 20 2024

கடன் பிரச்சினையால் பாங்கில் லஞ்சம் வாங்கிய கண்ணன்- ஐஸ்வர்யாவைத் திட்டித் தீர்த்த முல்லை- மீனா கேட்ட கேள்வி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யாவையும் கண்ணனையும் அவரது சித்தி திட்டுகின்றார்.நாளைக்குள்ள பணத்தை தராவிட்டால் நான் மூர்த்தி கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என்று சொல்கின்றார். அந்த நேரம் பார்த்து முல்லை வர ஐஸ்வர்யா சித்தியோட பையன் படிக்கிறான் இல்லை அதை பற்றி தான் சித்தி பேசிட்டு இருக்கு என கதையை மாற்றுகின்றார்.


இதனை நம்பாத முல்லை மறைந்து நின்று இவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று கேட்கின்றார். பின்னர் பாங்கிற்கு கண்ணன் வேலைக்கு சென்ற போது ஒருவர் லோன் கேட்டு டொகிமென்டை கொண்டு வந்த கொடுக்கின்றார். அதில் சில மொகிமென்ட் இல்லாத காரணத்தால் கண்ணன் சைன் வைக்க மறுக்கின்றார்.

பின்னர் அந்த நபர் அங்கு வேலை செய்யும் நபர் மூலம் கண்ணனுக்கு லஞ்சம் கொடுத்து டொகிமென்ட்டில் சைன் வாங்குகின்றார்.கண்ணனும் சித்திக்கு காசு கொடுக்க வேண்டும் என்பதை நினைத்து அந்த பணத்தை எடுத்து வைக்கின்றார். தொடர்ந்து ஜீவாவும் மூர்த்தியும் ஓர் இடத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.


மேலும் வீட்டில் ஐஸ்வர்யா கண்ணனுக்காக பார்த்திட்டு இருக்கும் போது தனம் அவரை இருக்க வைதது பேசிட்டு இருக்கிறார். அப்போது வளைகாப்பு பண்ணனும் என்று சொல்ல ஐஸ்வர்யா பண்ண வளைகாப்பு பண்ண வேண்டாம் என்று சொல்கின்றார்.அத்தோடு கதிர் மாமா மட்டும் பாங்க்ல இருந்து வந்தவங்களை அடிக்காட்டி எனக்கு வளைகாப்பு நடந்திருக்கும் என்று சொல்ல முல்லை கோபப்பட்டு திட்டுகின்றார்.

இந்த நேரம் மீனாவும் வர முல்லை ஐஸ்வர்யா சொன்ன விஷயத்தை சொல்ல மீனாவும் ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றார். அத்தோடு வளைகாப்பு பண்ணுறதுக்காக மண்டபத்துக்கு கட்டிய பணத்தை திரும்ப வாங்கிட்டியா என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ச்சியடைகின்றார். அத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement