• May 20 2024

பேசாமல் வந்திடுங்க... வித்தியாசமான முறையில் வெளியேறுபவரின் பெயரை அறிவிக்கும் கமல்.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது.

அந்தவகையில் கடந்த வாரத்தில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் மணிகண்டன், ஜனனி, ஏடிகே ஆகிய மூவரில் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் " இந்த மூவரில் யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள்" என அந்த மூவரையும் பார்த்துக் கேட்கின்றார். அதற்கு மூவருமே "நான் தான் போவேன்" என தம்மைத் தாமே கூறுகின்றனர். 

இதனைத் தொடர்ந்து கமல் எவிக்சன் கார்ட்டை உள்ளே வைத்து விட்டு இனி இது எல்லாம் தேவையில்லை, குடவோலை முறையில் யார் தெரிவு செய்யப்படுகின்றீர்களோ அவர்கள் வெளியே வந்து விடுங்கள் எனக் கூறுகின்றார்.  இந்நிலையில் ஏடிகே சென்று அதிலிருந்து ஒருவர் பெயரை எடுக்கின்றார். 

அது யாராக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement