• May 22 2024

வீட்டிற்குத் தெரியாமல் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடிக்கும்... ஜீவானந்தத்தின் பீ.ஏ ஃபர்ஹானா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் தற்போது ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமல்லாது அப்பத்தாவின் 40% ஷேர் யாருக்கு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அத்தோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த டிவிஸ்டுகளுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் பி.ஏ. ஃபர்ஹானாவாக ஜிபா ஷெரின் நடித்துள்ளார். இதில் இவர் ஹிஜாபுடன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


இந்நிலையில் ஜிபா சீரியலில் கிடைத்த வாய்ப்பு குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்தவகையில் ஜிபா ஷெரின் கூறுகையில் "எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி என்னோட ஃபிரண்ட். என்னை நடிக்க சொல்லி அடிக்கடி கேட்பார். ஆனால், ஹிஜாப் போட்டு கொண்டு இருப்பதால் நடிக்க முடியாது என நான் கூறி வந்தேன். 

மேலும் ஒரு முறை முஸ்லீம் பெண்ணிற்கான ரோல் இருப்பதாக வைஷ்ணவிக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக என்னோட செல்போன் எண்ணை மேனேஜரிடம் கொடுத்துள்ளார். என்னை ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்தனர். நான் அங்கு சென்றதும், நான் ஏற்கெனவே செய்த ரீல்ஸ் மட்டும் பார்த்த திருசெல்வம் சார் என்னை நடிக்க உடனே ஒப்புக் கொண்டார்" என்றார்.

அதுமட்டுமல்லாது "அந்த சமயத்தில் ஹிஜாப் எல்லாம் கழட்ட முடியாது. அதனுடன் தான் நடிப்பேன் என்றேன். என்னுடைய முடிவுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் திருசெல்வம் சார் ஓகே சொல்லிவிட்டார். முதலில் பெரிய கேமரா, லைட்ஸ் செட்டப் எல்லாத்தையும் பார்த்து பயந்து விட்டேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சம் நடிக்க ஆரம்பித்தேன்" எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு "நான் சீரியலில் நடித்தது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. என் வீட்டில் வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். நாம் சீரியலில் நடிப்பேன் என்றால் கண்டிப்பாக  அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  வீட்டுக்கு தெரியாமல் டிக்டாக் வீடியோ செய்து இருக்கிறேன். ஆனால் யாருக்கும் அது இன்றுவரை தெரியாது. 

இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நான் நடித்ததை என் அப்பாவிடம் அவரது நண்பர்கள் சொல்லி விட்டார்கள். அதை நம்பாத என் அப்பா நான் சீரியலில் நடித்து இருக்க மாட்டேன் என்று அவர்களிடம் கூறியுள்ளார். பின் என்னிடம் கேட்ட போது தான் நான் சீரியலில் நடித்ததை கூறினேன். சீரியலில் நான் நடிக்கும் கேரக்டர் கேட்டு என் அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்" எனவும் கூறியுள்ளார் ஜிபா ஷெரின்.

Advertisement

Advertisement