தமிழ் திரையுலகில் சமூக பிரச்சினைகளை தைரியமாக திரையில் வெளிப்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் இயக்குநர் த.செ. ஞானவேல். திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ள அவர், எழுதியுள்ள புதிய நூலான ‘மைல்கல்’ தற்போது கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் எழுதிய ‘மைல்கல்’ என்ற புத்தகத்தை நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து பரிசளித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சினிமாவை தாண்டியும் சமூக உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் இருவரின் இந்த சந்திப்பு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா இணைந்த திரைப்படமாக ‘ஜெய்பீம்’ வெளியாகி மிகப்பெரிய பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம் சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வெளிப்படுத்தியதாக பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், தனது புதிய நூலான ‘மைல்கல்’ புத்தகத்தை சூர்யாவிடம் வழங்கியிருப்பது, அவர்களுக்கிடையேயான நட்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாமல், இந்த புத்தகத்தை இயக்குநர் த.செ. ஞானவேல் இதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் வழங்கியிருந்தார். அந்த சந்திப்பும் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
Listen News!