• May 19 2024

ராதிகாவை அசிங்கப்படுத்தி பேசிய ஈஸ்வரி- பாக்கியா வீட்டுக்கு வந்து நின்ற கோபி- கடும் அதிர்ச்சியில் ராமமூர்த்தி- Baakiyalakshmi Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கணேஷின் அம்மாவும் அப்பாவும் கணேஷ் இருக்கும் இடத்திற்குச் சென்று தங்களுடன் வரும்படி கேட்கின்றனர் ஆனால் கணேஷ் வந்தால் அமிர்தா மற்றும் நிலாவோடு தான் வருவேன் என்று அடம்பிடிக்கின்றார். மறுபுறம் கோபியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வரப்போவதாக ஈஸ்வரி சொல்ல எல்லோரும் தடுக்கின்றனர்.


அப்போது பாக்கியா அவர் இங்க வரவேணாம் என்று சொல்ல மாட்டேன். அதே மாதிரி என்னையும் இங்கையே இரு என்று நீங்க சொல்லக் கூடாது என்று சொல்ல,ஈஸ்வரி அவன் இங்க வருவதால் உனக்கு என்ன பிரச்சினை செழியன் கல்யாணம் பண்ணிட்டான் ஆனால் அவல் ஒருநாள் லேட்டாக வந்தால் கூட ஆயிரம் கேள்வி கேட்கிற தானே,

எழில் கல்யாணத்தில பிரச்சினை வந்தப்போ கூட அவன் பக்கம் நின்று தானே பேசின, நான் மட்டும் என் புள்ளை கூட பேசவே கூடாத, எது எந்த விதத்தில சரி நான் போய் கோபியைக் கூட்டிட்டு தான் வருவேன் என்கின்றார். தொடர்ந்து கோபி வீட்டில் கோபியை ராதிகா திட்டிக் கொண்டே இருக்கின்றார்.


வீட்டு செலவு, வீட்டு லேன் எல்லாத்தையும் நான் தான் கட்டிட்டு இருக்கிறேன். இதில உங்களையும் பாரு என்றால் எப்படிப் பார்க்கிறது, உங்க அம்மா ஏதோ என்னில தான் எல்லாத் தப்பும் இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்கிறாங்க என்று சொல்ல, அந்த நேரம் ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு போகின்றார்.

அப்போது ராதிகாவைப் பார்த்து உடம்பு சரி இல்லாமல் இருக்கிற டைம்ல கூட அவனை நிம்மதியாக இருக்க விடமாட்டியா என்று திட்டுவதோடு கோயியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றார். ஆனால் கோயியோ அதெப்படிமா முடியும் நான் வரல ராதிகா என்னை நல்லாத் தான் பார்த்துக் கொள்ளுறா என்று சொல்கின்றார்.


இருந்தாலும் ஈஸ்வரி கோபியை தன்னுடன் வருமாறு அழைக்கின்றார்.அத்தோடு பாக்கியா வீட்டில் கோபி வரமாட்டாரு என்று எல்லோரும் ஆறுதல்ப்படுத்திக் கொண்டிருக்க ஈஸ்வரி கோபியைக் கூட்டிக் கொண்டு வந்து நிற்கின்றார். இதைப் பார்த்த எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement