• May 20 2024

தவறாகப் பேசிய கோபியிடம் நீயாரு என்று கேட்ட ஈஸ்வரி- சந்தோஷம் தாங்க முடியாமல் அழுத பாக்கியா- சுவாரஸியமான ப்ரோமோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றது.

இந்த சீரியலில் ஈஸ்வரி காசிக்கு போய்ட்டு வந்ததலில் இருந்து மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றார். அத்தோடு மறுபுறம் பாக்கியா இனிய படிக்கும் காலேஜில் சேர்ந்து படித்து வருகின்றார். இந்த விஷயம் ஈஸ்வரிக்கும் தெரிந்து ஈஸ்வரியும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.


ஆனால் கோபியால் பாக்கியா காலேஜிற்கு போவது பிடிக்கவே இல்லை. இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகிள்ளது. அதில் ஈஸ்வரியை தனியாகச் சந்தித்த கோபி பாக்கியா காலேஜிற்குப் போவது பிடிக்கவில்லை என்று கூறுகின்றார். அதற்கு ஈஸ்வரி அவ உன்னை மாதிரி துரோகம் பண்ணிட்டு போகலையே,

அவ எங்க போனாலும் அதைக் கேட்க நீ யாரு ,நாங்க அவகூட தான் நிற்போம் என்று சொல்லி விட்டு உள்ளே வருகின்றார். இதனை மேல்மாடியில் நின்று பார்த்த பாக்கியா சந்தோஷப்படுவதோடு ஓடிப்போய் ஈஸ்வரியைக் கட்டிப் பிடிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement