• May 21 2024

லியோ படத்தின் கதை இது தானா?- இணையத்தில் கசிந்த தகவல்- த்ரிஷா இப்படியொரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றாரா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

300 பட்ஜெட்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தில் பெஸ்ட் லுக் மற்றும் பெஸ்ட்  சிங்கிள் பாடல் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இருப்பினும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நான் ரெடி பாடல் வெளியாகி பல சர்ச்சைகளிலும் சிக்கியது.

இந்த நிலையில் லியோ படத்தின் கதை இதுதான் என இணையத்தில் தகவல் ஒன்று பரவிவருகிறது. அதாவது, காஷ்மீரில் பேக்கரி மற்றும் காபி ஷாப் ஒன்றை விஜய் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் விஜய் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கணவன் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறார்கள். விஜய்க்கு படத்தில் பெயர் பார்த்திபன். அப்போது ஒரு பெரிய மாஃபியா கேங்கால் பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களுடன் விஜய் மோதும்படி சூழல் உருவாகி மோதலும் நடக்கிறது.


இதற்கிடையே விஜய்க்கும் ஏற்கனவே ஒரு கேங்குக்கும் பிரச்சினை இருக்கும். அவர்களிடமிருந்து தனது அடையாளத்தை மறைத்துதான் காபி ஷாப் வைத்திருப்பார். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினையால் விஜய்யின் இருப்பிடம் அவரின் முன்னாள் எதிரிகளுக்கும் தெரியவரும். அப்போது ஃபிளாஷ்பேக் ஒன்று செல்லும். அதனைத் தொடர்ந்து இரண்டு கேங்குகளையும் விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல்தான் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

காஷ்மிரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை மற்றும் திருப்பதியில் நடந்தது. சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் விஜய் டப்பிங்கையும் இன்னும் சில நாட்களில் முடித்துவிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement