பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் அதன்போது, “பாலிவுட்டில் பணி புரிந்த போது நான் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தேன். அதனால் எனது எல்லையை விரிவுபடுத்த நினைத்து அமெரிக்கா சென்று நடிக்க ஆரம்பித்தேன். மேலும், ‘வாரணாசி’ படம் மூலம் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. ஹாலிவுட், பாலிவுட் என பிரிக்க விரும்பவில்லை.” என அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இந்த கருத்துகள் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவரின் திறந்த மனப்பாங்கை பாராட்டியுள்ளார்கள்.
பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்துக்கள், இந்திய திரைத்துறையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து மறைமுகமாக ஒரு செய்தியை தெரிவிக்கின்றன என்று சிலர் கருதுகின்றனர்.
Listen News!