• May 19 2024

அருண் விஜய்யின் ஆசை இது தானா..? அவரே கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். மேலும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார்.

இருந்தாலும் பல வருடங்களாக இவர் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததத. அதற்கு பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் இவரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதற்கு பின் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் யானை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படம் வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகின்றது.

அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் அருண் விஜய் செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி ஆகியோர் உடன் பணியாற்ற ஆசை இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர்களின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் இந்தியா ஆடியன்ஸுக்கு நல்ல கண்டெண்ட் கொடுக்க முடியும் என அருண் விஜய் கூறி உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement