• May 02 2024

வெண்ணிற ஆடை மூர்த்திக்கு இத்தனை வயதாகின்றதா...தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமெடி நடிகர்களில் சிவாஜி முதல் விஜய் வரை பல நடிகர்களின் படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.இவர் தற்போது ஒரு சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காணவில்லை.இவ்வாறு ரசிகர்கள் பலரும் இவருக்கு என்னஆனது.? ஏன் நடிக்கவில்லை.? என்ற பல கேள்வி எழுந்தது.

வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர், வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்டவர். மேலும் இவர் 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். அதுமட்டும் இல்லாமல் திரையுலகில்  நகைச் சுவையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வெண்ணிறாடை மூர்த்தி.  இவர் திரையுலகில் பல்வேறு திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார்.


இதனை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமானர் மூர்த்தி.இந்த படத்திற்கு பின்னர்  தான் இவரை அனைவரும் ‘வெண்ணிறாடை மூர்த்தி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். எனினும் சமீபத்தில் இவர் 81 வது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடியுள்ளார்.அத்தோடு , வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 81 வயதா.? என்று எல்லோரும் பிரமித்துப் போய் விட்டார்கள்.

அத்தோடு , தன்னுடைய வெண்ணிற ஆடை மூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில்  வைரலாகியுள்ளது.தமிழ் திரையுலகில்  எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று விஜய், அஜித் காலம் வரை அதாவது மூன்று தலைமுறைக்கும் மேலாக சினிமா உலகில் சிறந்த காமெடி நடிகராக விளங்கி வருகிறார்.மேலும், இவர் தன்னுடைய உடல் வித்தியாசமான பாவனைகளாலும், இரட்டை மொழி வசனங்களாலும், வித்தியாசமான குரலினாலும் மக்கள் மத்தியில் இன்று வரை பிரபலமாக உள்ளார்.


இவர் சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துள்ள நடிகை மணிமாலாவை திருமணம் செய்து கொண்டார்.அத்தோடு இவர் 1965 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் தான் நடிகை மணிமாலாவை பார்த்தார்.இதன் பின் இருவரும் முதலில் நட்புடன் பழகி வந்தார்கள். சில காலங்களில் இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பின் இவர்கள் இருவரும் 1970 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.எனினும் தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார்.மேலும் இப்படியொாரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார் வெண்ணிறாடை மூர்த்தி. அதில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது இவர் எப்படியுள்ளார் என்று பாருங்கள்...








Advertisement

Advertisement

Advertisement