சூப்பர் சிங்கர் ஜூனியரில் குழந்தையாக இருந்தபோதே பாடி பலரின் உள்ளத்தை கவர்ந்தவர் ஆஜீத். இவரின் உடையும், அழகாக முக பாவனைகளுடன் பாடும் திறமையும் மக்களுக்கு பிடித்து இருந்தது. சூப்பர் சிங்கரின் டைட்டிலையும் தட்டிச்சென்றார் ஆஜீத். இதன் பின்னர் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆல்பம் பாடல்கள் பாடி வந்தார்.
இதன் பின்னர் இவருக்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சுவாரஸ்யம் இல்லாத நபராக விளையாடி வந்த இவர் ஒரு கட்டத்தில் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
இவருடன் பிக்பாஸில் நெருக்கமாக இருந்தவர்தான் கேபி என்கிற கேபிரியல்லா. இவரும் விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 7C என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து அவருக்கு தங்கையாக நடித்து இருப்பார்.
அத்தோடு நடனத்தில் ஆர்வமுள்ள இவர் ஜோடி நம்பர் ஒன்னில் ஆடி வெற்றியும் பெற்றார். இதன் பின்னர் படம், சீரியல் வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் பிக்பாஸில் பங்கேற்றார். இவரும் ஆஜீத் போலவே சுவாரஸ்யம் குறைவாக இருந்த காரணத்தால் பாதிலேயே வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸில் இருந்தபோதே கேபியும் ஆஜீத்தும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு கிளம்பியது. ஆனால் பிக்பாஸுக்குப் பிறகும் கூட இருவரும் நெருக்கமாகவே காணப்பட்டனர். அடிக்கடி வெளியில் செல்வது, நடனம் ஆடி ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர். சமீபத்தில் இருவரும் புல்லட் பாடலுக்கு ஆடி இருந்தது வைரலானது. தற்போது முதல் முறையாக கேபியை காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆஜித் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
அதில் கூறயதாவது...அதாவது நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவ்வளவு சண்டை போட்டோம் அதை அவர்கள் டிவியில் காட்டவில்லை.ஆனால் காய் பாய் அப்படி தான் சொல்லிட்டு இருந்தோம்.பின்னர் வெளியில் வந்த பிறகு அதை எல்லாம் மறந்து விட்டு க்ளோஸ் ஆனோம்.ஆனால் சொன்னால் நம்ம மாட்டீர்கள் நாங்கள் இருவரும் ப்ரதர் சிஸ்ரேர்ஸ் மாதிரி தான் அவ்வளவு கெயாரிங்காக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு இவரின் கெரியரை பொறுத்தவரையில் வெப் சீரிஸ் மற்றும் தெலுங்கு படத்தில் கெமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!